கோப்பையை பருகும் தேநீர்
வான்கூவர் நகரம் ஒன்றில் ரயில் நிலையம் ஒன்றுண்டு. மரக்கட்டைகளினால் ஆன அதன் நடைமேடையில் முன்பொருமுறை நானும் அம்மாவும் ரயிலுக்காக காத்திருந்தோம். அங்கு வைத்துதான் அம்மாவின் தம்பி இறந்து போனதை யாரோ வந்து அம்மாவிடம் கூறினார்கள் கன்னங்களைத் தாண்டி கால் விரல்களில் கண்ணீர் துளிகள் விழுந்த பிறகும் அம்மா அந்த நடைமேடையிலேயே நின்று கொண்டிருந்தார். உலகம் என்பது அணுக்களால் ஆனது நாம் ஒரு மேசையைத் தொடுகிற பொழுது அந்த மேசையும் நம்மைத் தொடுவது உண்மையானால் அந்த நடைமேடையில் அம்மாவின் அணுக்களும் கலந்திருக்கும். நான் போய் அந்த நடைமேடையில் அம்மா நின்ற இடத்தில் நிற்க போகிறேன். நீண்ட நேரம், மிக நீண்ட நேரம் கன்னங்களைத் தாண்டி கால்விரல்களில் கண்ணீர் துளிகள் விழுந்த பிறகும் . -நான்சி வில்லியர்ட் உறவுகளின்றி திரியும் உயிர்கள் எப்படி இருக்கும் கடிதங்களின்றி வெறுமென கிடக்கும் தபால் பெட்டியைப்போல,மரமென்னும் உயிரைத் தாங்க உறவுகள் எனும் வேர்கள் கிடக்கின்றன. ஒருநாள் சென்ட்ரல் சுரங்கப்பாதையில் ஒரு அம்மா அதன் படிக்கட்டுகளில