Posts

Showing posts from February, 2011

விட்டில் பூச்சி(சிறுகதை)

                                     அதிகாலை தென்னங்கீற்றுக்களின் இடைவெளியில் சூரியன் எட்டி பார்த்துகொண்டிருந்தான். கடிகாரத்தில் நேரம் சரியாய் 6.40யை கடந்திருந்தது.  "சரி... என்னப்பா? ஆளாளுக்கு ஒருத்தர் வாயை ஒருத்தர் பார்த்துகிட்டு இருக்கீங்க. சட்டு புட்டுன்னு ஆக வேண்டிய காரியத்தை பாருங்கப்பா!!" கூட்டத்தில் இருந்த முருகேசன் தன் கையில் வைத்திருந்த துண்டை உதறியவாரே சொல்லி முடித்தார்.  "அண்ணே! உங்களுக்கே தெரியும், மூத்த புள்ள நான் இப்படி குத்து கல்லுமாதிரி இருக்கும் போது என்னைய விட இளையவன் சுடலை அவனுக்கு சொத்துல அதிகமா எழுதி வச்சா என்ன அர்த்தம் ?" சத்தமாக சொல்லி முடித்தான் முத்தையா  "அது சரி... முத்தையா உங்க அப்பா நல்ல சிவம் ஊர்ல எவ்ளோ பெரிய மனுஷன், இப்ப அவர் இருக்குற நிலையில நீ இப்படி பேசுனா அவர் மனசு எவ்ளோ பாடுபடும்."  சுவரின் மூலையில் சோகமாக அமர்ந்திருந்தான் சுடலை. நல்ல சிவம் கட்டிலில் ...

இறந்தவன் பேசுகிறேன்

Image
                                       அத்தியாயம் -1 சென்னை, தாம்பரத்திலிருந்து செல்லும் ரயில் அது. புதியதாய் சேர்ந்த டிரைவர் ஒருவர் ஓட்டிச் சென்றார். இரவு வந்தது. ஒரு இடத்தில் வண்டியின் முன் புறத்தில், ஒரு பெண் உருவம் வண்டியை, ''நிறுத்துங்க ""நிறுத்துங்க" ன்னு கத்த, அலறிப் போய் இருக்கிறார் டிரைவர். பக்கத்துல இருந்த டிரைவர் "ஒண்ணும் பயப்படாதிங்க, இவங்க இந்த வண்டில அடிபட்டு செத்து போனவங்க. அடிக்கடி இந்த மாதிரி வருவாங்க. உங்களுக்கு கொஞ்ச நாள் ல பழகிடும்" ன்னு சொல்ல கதி கலங்கி போயிருக்கிறார்  அவர். டி கே எம் கல்லூரி ஆம்புலன்ஸ் சத்தத்தோடு வரவேற்றது. வேகமாக இறங்கிய ஸ்ட்ரச்சர், லைப்ரரியில் நுழைந்தது. அங்கு சதை கூழமாய் ரத்த வெள்ளத்தில் இருந்தார் பரந்தாமன். ரத்த திட்டுகள் உறைந்து, ஹீமோக்லோபின் காற்றில் கலந்து கறுப்பு நிறத்தில் இருந்தது ரத்தம். "என்ன நடந்தது? யார் பண்ணினாங்க?" விசாரிக்கத் தொடங்கினார் நந்தா. 'கிரிமினல் பீரோ' வை சேந்தவர். "ஏதோ க...

ரூ .6.50 பயணச்சீட்டு

நான் போகிற வண்டி திருவொற்றியூர் ல இருந்து அம்பத்தூர் போய் கிட்டு இருந்தது ''(34) டிக்கெட் எடுத்து நானும் ஜன்னலோர சீட்ல வழக்கம் போல அமர்ந்திருப்பேன் ,அதே நேரம் ,அதே பேருந்து என்பதனால் அதே இருக்கையும் கூட !!,பஸ்ல கூட்டம் அதிகமாகுற நேரத்துல யாராவது ''வயசானவங்க வந்தா அவங்களுக்கு!'' என் சீட்ட  கொடுத்துடுவேன் ,நான் கொஞ்ச நேரம் நின்னுகிட்டு வருவேன் ,எப்படியும் நான் இறங்குவதற்கு முன்னாடியே அவங்க இறங்கிடுவாங்க அதனால ..சில சமயம் திருவொற்றியூர் வரைக்கும் நின்னுகிட்டே வந்திருக்கேன் , போகும் போது இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் நாவல்தான் எனக்கு பொழுது போக்கே ஒரு நாளைக்கு ஒரு நாவல முடிச்சிடுவேன் ,போகும் போது பாதி ''அத்தியாயத்தையும் வரும் போது மீதி அத்தியாயத்தையும்'' ,நின்னு கிட்டு வரும் போது கொஞ்சம் கஷ்டம் தான் அத்தியாயமெல்லாம் . சில சமயம் சீட் ,கிடைச்சும் டிரைவர் ,கண்டக்டர் வர நேரம் ஆகும் பொழுது ,பஸ்சுக்குள்ள பாப்கார்ன் ,வேருகடலை,வியாபாரம் லாம் நடக்கும் ,  ''வேருகல்லேய்ய்..''ன்னு ராகமா  இழுக்கும் போது ஒரு மாதிரியா இருக்கும்.சில சம...