வேட்டை
வேம்புளியூர் மயானம் இரவு நிசப்தமாய் இருந்தது. புதியதாய் இறந்த பிணங்கள் மட்டும் லேசாய் புகைந்து கொண்டிருந்தன. தோற்றம் சரியாய் தெரியவில்லை. மறைவு மட்டும் தெரிந்தது. மூர்த்தி -18.07.2009 மின்னல் வெளிச்சம் ஒன்றில் இந்த தேதி துல்லியமாய் தெரிந்தது .மழை வர காத்துகொண்டிருக்கும் மேகங்கள் மின்னிக்கொண்டே இருந்தன. உஷ்..எனும் சத்தத்தோடு மரங்கள் விசும்பி கொண்டிருந்தது.. லேசாய் முனகல் சத்தம் கேட்டது அந்த சமாதியில்........ மூச்சு விடும் சத்தம்... மூர்த்தி இறப்பதற்கு சில நாட்கள் முன்பு!!!! டேய் மூர்த்தி நீதான் இதுக்கு சரியானவன் 'ஹ்ம்ம் ஏறு கீழே குதிடா டேய்!! என்ன விட்டுடுங்கடா நாம ஏதோ சின்ன சின்ன திருட்டு பண்ணிட்டு இருந்தோம் ''கோவில நகை கொள்ளை அடிக்கிறது பாவம் டா'' நான் போக மாட்டேன் .. சே ''அப்படியே'' அரைஞ்சேன்னு வச்சிக்கோ மவனே கீழே குதிச்சி ஓடி போய்டு''. மூர்த்தி காத்திருக்க சங்கரும் ரவியும் நகைகளை திருடி வந்து விட்டனர். பல கோடி மதிப்பிருக்கும் அந்த நகைகளுக்கு பின்னே!! நாவலூர் சிவன் கோயில் னா சும்மாவா ? மூர்த்தி பயத்தில் நடுங்க டேய் என்ன ...