Posts

Showing posts from April, 2011

இது காதல் விளையாடும் தெரு(சிறு கதை )

Image
வசந்த காலம் வந்துவிட்டதை குயில் கூவி தெரிவித்தது. வானம் மேக மூட்டத்துடன்  இருக்க, சூரியன்  பூமியில் பட அவசரபட்டு கொண்டிருந்தான். பிரவீன், டேய்... பிரவீன் !! எழுந்திருடா விடிஞ்சாச்சு!!. அம்மா குரல் கேட்டு கண்விழித்தான் பிரவீன். சோம்பல் முறித்து பிரஷ் யையும் பேஸ்டையும் எடுத்துகிட்டு வெளியே வந்தான். சூரிய  கதிர் கொஞ்சம் கொஞ்சமாக பூமியில் பிரசன்னமாகி கொண்டிருந்தது. சாலையில் சிறு சிறு சத்ததோடு மக்கள் நடமாடிகொண்டிருந்தனர். பேப்பர் போடும் சிறுவனின் சைக்கிள் பெல் சத்தம், இட்லி மாவு விற்பவரின் குரல், நடுவே வர்ஷா கல்லூரிக்கு போறதையும்  பார்த்தான். இந்த இடத்தில் ''வர்ஷா''வை பற்றி. "வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரம் போல் வர்ஷா அவ்ளோ அழகு". இன்னும் சினிமா காரர்கள் யாரும் பாக்கலை, பார்த்திருந்தால்... ''ஏலம் எடுத்து நடிக்க வச்சிருபாங்க வர்ஷாவை''. இரண்டு  பேரும் ஒரே ஏரியா என்பதால் அடிக்கடி சந்தித்து கொள்வார்கள். வர்ஷா தூரத்துல வந்தாலே நம்மாளு நண்பரை யாரும் பக்கத்துல சேர்க்காம  தனியா வருவான். ரெண்டு பேரும் ஓரக் கண்ணால பார்த்துட்டு போய்டுவாங...

மரணமும் அதற்க்கு மேலும் .......

Image
இங்க இறந்து கிடக்கிறது நான் தான் .நான் எப்பவும் போலத்தான் இருந்தேன் , ஆனா எல்லாரும் சொல்றாங்க நான் செத்துடேனாம். நான் சாகுற வரைக்கும் எனக்கு தெரியாது மரணம் எப்படி இருக்குமென்று , இறந்தவன் நான் சொல்றேன்  நீங்க தெரிஞ்சுகங்க! அது ஒரு மணம்,அமைதியான வெண்மை நிறம் , அதிக  ஒளி, சத்தமில்லாதது , கடலில் நீச்சல் அடித்துவிட்டு இரவில் தூங்கும் போது வரும் பிரம்மை போல் இருக்கும் , இல்லாத ராட்டினத்தில் சுற்றுவது போல.  எனக்கு தெரியாது இவ்வளவு சீக்கிரம் நான் இறப்பேன் என்று , என் கைபேசிக்கு புதுசா வந்திருந்த குறுந்தகவல் யாருடையது என்று கேட்கலாம் என பதில் அனுப்பி இருந்தேன்,  நீங்க யாரு?இன்னும் பதில் வரலை அவர்களிடமிருந்து , பதில் வந்தாலும் இனி என்னால அது யாரென்று  தெரிஞ்சிக்க முடியாது. நான் கிழே விழுந்து கிடக்கும் போது என் கைபேசியை எடுத்து  ஒருவர் எனக்கு தெரிந்தவரை  அழைக்க பார்த்தார், நானும் தான் அவர்க்கு உதவுனேன் அவர்க்கு அது காதில் விழலை,  அண்ணே ..அதுல நம்பர் ரெண்டை அழுத்தி கால் பட்டன் கொடுங்க என் அண்ணன் பேரை ஸ்பீட் டயல் வச்சிருக்கேன்!! இந்த ம...

கண்ணாடி நாட்கள் (சிறு கதை )

Image
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தின் மேல் போய்கொண்டிருந்தது அந்த ரயில். ஜன்னலோரத்தில் சோகமாய் உட்கார்த்திருந்தான் செழியன். ஜன்னலுக்கு வெளியே வாணிபத்திற்காக சில கப்பல்கள் மிதந்து கொண்டிருந்தன. அவனுக்கு எதிரே ஒரு குடும்பமும் பயணித்து கொண்டிருந்தது. அவன் அருகில் இருந்த பெரியவர் ஒருவர் வாயில் வெற்றிலையை குதப்பியவாறே பேச ஆரம்பித்தார், "என்ன தம்பி! ரொம்ப சோகமா இருக்கீங்க!!," ஏதாவது பிரச்சனையா? சொல்லுங்க தம்பி''. எனக்கு சாமுத்திரிகா லக்ஷணம் தெரியும், உங்களைப் பார்த்தா பெருசா எதையோ இழந்த மாதிரி தெரியுது. அதான் கேட்டேன்.” மெல்ல பேச ஆரம்பித்தான் செழியன், "ஆமாங்கையா யாருக்கும் வராத பிரச்சனை எனக்கு வந்திருக்கு". ”என்ன தம்பி சொல்றீங்க...? என்னாச்சு கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்களேன்.” இருக்கையில் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார ஆரம்பித்து,"என் பேரு செழியன், சென்னை தான் சொந்த ஊரு, நானும் யாழினியும் காதலிச்சி கல்யாணம் பண்ணிகிட்டோம். கோவிலை கடக்கும் போது எதேச்சையா  நம்ம கை நெஞ்சுக்கும் உதட்டுக்கும் போகும்ல அந்த மாதிரிதான் யாழினி கிட்ட எதேச்சையா என் காதலை சொன்னேன்” எ...