வான்கூவர் நகரம் ஒன்றில் ரயில் நிலையம் ஒன்றுண்டு. மரக்கட்டைகளினால் ஆன அதன் நடைமேடையில் முன்பொருமுறை நானும் அம்மாவும் ரயிலுக்காக காத்திருந்தோம். அங்கு வைத்துதான் அம்மாவின் தம்பி இறந்து போனதை யாரோ வந்து அம்மாவிடம் கூறினார்கள் கன்னங்களைத் தாண்டி கால் விரல்களில் கண்ணீர் துளிகள் விழுந்த பிறகும் அம்மா அந்த நடைமேடையிலேயே நின்று கொண்டிருந்தார். உலகம் என்பது அணுக்களால் ஆனது நாம் ஒரு மேசையைத் தொடுகிற பொழுது அந்த மேசையும் நம்மைத் தொடுவது உண்மையானால் அந்த நடைமேடையில் அம்மாவின் அணுக்களும் கலந்திருக்கும். நான் போய் அந்த நடைமேடையில் அம்மா நின்ற இடத்தில் நிற்க போகிறேன். நீண்ட நேரம், மிக நீண்ட நேரம் கன்னங்களைத் தாண்டி கால்விரல்களில் கண்ணீர் துளிகள் விழுந்த பிறகும் . -நான்சி வில்லியர்ட் உறவுகளின்றி திரியும் உயிர்கள் எப்படி இருக்கும் கடிதங்களின்றி வெறுமென கிடக்கும் தபால் பெட்டியைப்போல,மரமென்னும் உயிரைத் தாங்க ...
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தின் மேல் போய்கொண்டிருந்தது அந்த ரயில். ஜன்னலோரத்தில் சோகமாய் உட்கார்த்திருந்தான் செழியன். ஜன்னலுக்கு வெளியே வாணிபத்திற்காக சில கப்பல்கள் மிதந்து கொண்டிருந்தன. அவனுக்கு எதிரே ஒரு குடும்பமும் பயணித்து கொண்டிருந்தது. அவன் அருகில் இருந்த பெரியவர் ஒருவர் வாயில் வெற்றிலையை குதப்பியவாறே பேச ஆரம்பித்தார், "என்ன தம்பி! ரொம்ப சோகமா இருக்கீங்க!!," ஏதாவது பிரச்சனையா? சொல்லுங்க தம்பி''. எனக்கு சாமுத்திரிகா லக்ஷணம் தெரியும், உங்களைப் பார்த்தா பெருசா எதையோ இழந்த மாதிரி தெரியுது. அதான் கேட்டேன்.” மெல்ல பேச ஆரம்பித்தான் செழியன், "ஆமாங்கையா யாருக்கும் வராத பிரச்சனை எனக்கு வந்திருக்கு". ”என்ன தம்பி சொல்றீங்க...? என்னாச்சு கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்களேன்.” இருக்கையில் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார ஆரம்பித்து,"என் பேரு செழியன், சென்னை தான் சொந்த ஊரு, நானும் யாழினியும் காதலிச்சி கல்யாணம் பண்ணிகிட்டோம். கோவிலை கடக்கும் போது எதேச்சையா நம்ம கை நெஞ்சுக்கும் உதட்டுக்கும் போகும்ல அந்த மாதிரிதான் யாழினி கிட்ட எதேச்சையா என் காதலை சொன்னேன்” எ...
அதிகாலை தென்னங்கீற்றுக்களின் இடைவெளியில் சூரியன் எட்டி பார்த்துகொண்டிருந்தான். கடிகாரத்தில் நேரம் சரியாய் 6.40யை கடந்திருந்தது. "சரி... என்னப்பா? ஆளாளுக்கு ஒருத்தர் வாயை ஒருத்தர் பார்த்துகிட்டு இருக்கீங்க. சட்டு புட்டுன்னு ஆக வேண்டிய காரியத்தை பாருங்கப்பா!!" கூட்டத்தில் இருந்த முருகேசன் தன் கையில் வைத்திருந்த துண்டை உதறியவாரே சொல்லி முடித்தார். "அண்ணே! உங்களுக்கே தெரியும், மூத்த புள்ள நான் இப்படி குத்து கல்லுமாதிரி இருக்கும் போது என்னைய விட இளையவன் சுடலை அவனுக்கு சொத்துல அதிகமா எழுதி வச்சா என்ன அர்த்தம் ?" சத்தமாக சொல்லி முடித்தான் முத்தையா "அது சரி... முத்தையா உங்க அப்பா நல்ல சிவம் ஊர்ல எவ்ளோ பெரிய மனுஷன், இப்ப அவர் இருக்குற நிலையில நீ இப்படி பேசுனா அவர் மனசு எவ்ளோ பாடுபடும்." சுவரின் மூலையில் சோகமாக அமர்ந்திருந்தான் சுடலை. நல்ல சிவம் கட்டிலில் ...
Comments